Friday, September 23, 2016

38. திவ்ய தேச தரிசன அனுபவம் 17.திருத்தண்கா (76)

தரிசனம் செய்த நாள் - 02/09/2016 (வெள்ளிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
3. திருத்தண்கா (76)
[பிரிந்து ஆற்றாளாய தலைவி தலைமகன் பக்கல் தனக்கு உள்ள
அன்புறுதியைத் தோழிக்குக் கூறுதல்]
ஆட்பட்டே னைம்பொறியா லாசைப்பட் டேனறிவும்
கோட்பட்டு நாணங் குறைபட்டேன் - சேட்பட்ட
வண்காவை வண்டுவரை வைத்த விளக்கொளிக்குத்
தண்காவைச் சேர்ந்தான் றனக்கு. (76)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

பசுமையான செடிகள் நிறைந்து குளிர்ச்சியாக இருந்ததால் இந்த இடத்தின் பெயர் திருத்தண்கா என்று வழங்கப்படுகிறது. தூய்மையான தர்ப்பைப் புற்கள் வளர்ந்த இடம் என்பதால் தூப்புல் என்றும் இந்த ஊருக்குப் பெயர் உண்டு.

தூப்புல் என்றால் நம் நினைவுக்கு வருபவர் வேதாந்த தேசிகர்தானே? வேதாந்த தேசிகரின் அவதார ஸ்தலம் இந்த ஊர்தான். அதனால்தான் வேதாந்த தேசிகருக்கென்று பெரிய சந்நிதி இந்த திவ்ய தேசத்தில் அமைந்திருக்கிறது.

அத்திகிரிஅஷ்டபுஜங்கம் ஆகிய திவ்யதேசங்களின் ஸ்தல புராணத்துடன் தொடர்புடையதுதான் இந்த திவ்ய தேசத்தின் ஸ்தலப் புராணமும்.

பிரம்மாவின் யாகத்தைத் தடுக்க சரஸ்வதி அனுப்பிய அரக்கர்கள் பலவிதங்களிலும் முயன்று யாகத்தைத் தடுக்க முயலாமல் போய், சூரிய சந்திரர்களை மறைத்து உலகை இருளில் மூழ்கடித்தனர். அப்போது விஷ்ணு பிரகாசமான ஒளியாகத்தோன்றி இருளைப் போக்கினார். அதனால் இவர் தீபப்பிரகாசர் என்றும், தமிழில் விளக்கொளிப் பெருமாள் என்றும் அழைக்கப் படுகிறார்.

தீபப்  பிரகாசர் (விளக்கொளிப் பெருமாள்)

அஷ்டபுஜம் கோயிலிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். தீபப்பிரகாசர் உபயநாச்சியார்களுடன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

தயார் மரகதவல்லிக்குப் பிரகாரத்தில் தனிச் சந்நிதி உள்ளது. பெருமாள் சந்நிதிக்கு அருகே ஆழ்வார் சந்நிதிகளும், பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன.

இந்தக் கோயிலை ஒட்டியே வேதாந்த தேசிகர் சந்நிதி ஒரு தனிக்கோயில் போல் பெரிதாக அமைந்துள்ளது. வேதாந்த தேசிகர் தெற்கு நோக்கியபடி அபய ஹஸ்தத்துடன் எழுந்தருளியிருக்கிறார். அவர் ஆராதனை செய்த லக்ஷ்மி ஹயக்ரீவரின் விக்கிரகமும் இங்கு எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது. பிரகாரத்தில் வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்களாலும், விஜயநகர அரசர்களாலும் போற்றிப்  பாதுகாக்கப்பட்ட கோயில் இது.

தீர்த்தம் - சரஸ்வதி தீர்த்தம். பிரம்மாவிடம் கொண்ட  கோபம் தீர்ந்த பின், தீபப்பிரகாசரின் வெப்பத்துக்கு இதமாக இருக்கும் வகையில் குளிர்ந்த தீர்த்தமாக இங்கு இருக்கிறார் சரஸ்வதி தேவி. 

விமானம் - ஸ்ரீகர விமானம்.

திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களில் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பதினெண் திருப்பதிகள்   
1848 பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-
தன்னை யாம் சென்று காண்டும்-தண்காவிலே            (2)

 இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திரு நெடுந்தாண்டகம்
2064 முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
      மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
      அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் 

No comments:

Post a Comment