கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.
வஹீந்திரன் என்பது ஆதிசேஷனைக் குறிக்கும் சொல். ஆதிசேஷனால் அமைக்கப்பட்ட கோவில் இது. அதனால் இது திருவஹீந்திரபுரம் என்றும், தமிழில் திருவந்திரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஊர் திருவந்திபுரம் என்றே அறியப்படுகிறது.
கிழே தேவநாதப் பெருமாளும், மலைக்கு மேலே லக்ஷ்மி ஹயக்ரீவரும் அருள் பாலிக்கிறார்கள்.
தேவர்களுக்காக விஷ்ணு போரிட்டபோது, அசுரர்கள் பக்கம் நின்று போர் செய்த சிவபெருமான் தன் சூலத்தை விஷ்ணுவின் மீது வீசினார். விஷ்ணு அதைத் தன் சக்கரத்தால் தடுத்து மும்மூர்த்திகளாகத் தன்னை சிவபெருமானுக்கு காட்டினார். அதனால் இந்தக் கோவில் உற்சவருக்கு மூவராகிய ஒருவன் என்ற பெயர்.
தேவாசுர யுத்தத்தில் போரிட்டுக் களைத்த விஷ்ணு தண்ணீர் கேட்க, வைகுண்டத்தில் இருக்கும் விராஜ நதியிலிருந்து நீர் எடுத்து வர கருடன் வைகுண்டத்துக்குப் பறந்து சென்றார். ஆனால் அதற்குள் ஆதிசேஷன் தன் வாளால் பூமியை அடித்துப் பிளந்து நீர் வரவழைத்தார்.
ஆதிசேஷனால் உருவாக்கப்பட்டதால் இந்தக் கோவில் புஷ்கரணி சேஷ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆதிசேஷன் நீர் கொணர்ந்த பின்பே கருடன் விராஜ நதி நீரைக் கொண்டு வந்தார் என்றாலும் விஷ்ணு அதையும் ஏற்றுக்கொண்டு அதை அங்கே ஒரு நதியாக ஓட விட்டார். கருட நதி என்று பெயர் பெற்ற அந்த நதி இப்போது பெயர் மருவி கடிலம் நதி என்று ஆகி விட்டது!
ஹனுமான் சஞ்சிவினி மலையைத் தூக்கிச் சென்றபோது அதில் சில பகுதிகள் இங்கு வீழ்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இங்கிருக்கும் மலை ஒளஷத கிரி என்று அழைக்கப்படுகிறது.
கீழே உள்ள தேவநாதப் பெருமாள் கோவிலிலிருந்து 74 படிகள் மேலே ஏறினால், ஒளஷதகிரி என்ற மலை மீது லக்ஷ்மி ஹயக்ரீவர் சந்நிதி இருக்கிறது.
மது, கைடபர்கள் என்ற இரண்டு அரக்கர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக்கொண்டு போய் விட்டதால், படைப்புத் தொழில் தடைபட்டபோது, மகாவிஷ்ணு குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக வடிவம் எடுத்து பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்தார்.
ஹயக்ரீவர் சன்னிதியில் கருடனும் இருக்கிறார்.
ராமானுஜருக்குப் பின் வந்த மிக முக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவரான வேதாந்த தேசிகர் பிறந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் (இங்கு திருத்தண்கா என்ற திவ்யதேசம் உள்ளது) என்றாலும், அவர் 40 ஆண்டுகள் வாழ்ந்தது இந்த ஊரில்தான். அவர் வாழ்ந்த வீடு தேசிகர் திருமாளிகை என்ற பெயரில் இப்போதும் இருக்கிறது.
ஔஷதகிரியில் உள்ள அஸ்வத்த மரத்தின் அடியில் அமர்ந்து வேதாந்த தேசிகர் கருடனை தியானம் செய்தார். கருடன் இவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை அருளிச் செய்தார். தேசிகர் ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து ஹயக்ரீவர் அருளைப் பெற்றார்.
"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"
என்ற புகழ் பெற்ற ஹயக்ரீவ சுலோகத்தை தேசிகர் எழுதியது இங்குதான்.
கருட பஞ்சஸதி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம், தேவநாத பஞ்சஸதி உட்படப் பல ஸ்தோத்திரங்களையம், நூல்களையும் தேசிகர் இங்கிருந்துதான் எழுதினார்.
இங்கிருக்கும் தேசிகருடைய விக்கிரகம் அவர் சொன்னபடி ஒரு சிற்பியால் செய்யப்பட்டது என்று நம்பப் படுகிறது.
மூலவர்: தெய்வநாயகன் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலம் உற்சவர்: மூவராகிய ஒருவன், தேவநாதன், அச்சுதன் , தாயார்: வைகுண்டநாயகி, ஹேமாம்புஜவல்லி தீர்த்தம்: சேஷ தீர்த்தம், கருட தீர்த்தம் விமானம்: சுத்தஸ்தவ விமானம் ஸ்தல விருட்சம்: வில்வம்
பெருமாள், தாயார் சந்நிதி தவிர அஹீந்திர புரநாதன், லக்ஷ்மி நரசிம்மர், ராமர், ஆஞ்சநேயர், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், பாஷ்யக்காரர், வேதாந்த தேசிகர் ஆகியோர் சந்நிதிகள் இங்கு உள்ளன.
இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இங்கே பார்க்கலாம்.
திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசத்தை 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். பாசுரங்கள் இதோ.
தலைச்சங்க நாண்மதியத் தான். (13)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி
மாயூரத்திலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள ஆக்கூரிலிருந்து, சீர்காழிக்குச் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைத்துள்ள தலைச்சங்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம். பூம்புகாரிலிருந்து 7 கிலோமீட்டர்.
முன்னொரு காலத்தில், பூம்புகாரிலிருந்து வந்த சங்குகள் விற்கப்படும் முக்கிய
சந்தை என்பதால் இந்த ஊருக்கு தலைச்சங்காடு என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
கோவில் வயல்களுக்கிடையில் அமைந்துள்ளது .
சந்திரனின் சாபம் தீர்த்த பெருமாள் என்பதால் இவர் தலைச்சங்க நாண்மதியப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர்: நாண்மதியப் பெருமாள், வெண்சுடர்ப் பெருமாள்
பிரத்யட்சம்: சந்திரன், தேவ ப்ருதங்கர், நித்யஸூரிகள், தேவர்கள்
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல் (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத் (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான் (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும் (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன் (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண் (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண் (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார் (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம் (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80) (2673)
பார்த்தன்பள் ளிக்குட் பணி. (40) - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி
சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.
சில கோவில்கள் சில சமயம் பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில் எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
திரு எஸ். சுரேஷ் 9994621065 9750728645.
இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .
மூலவர்: ஸ்ரீதேவி, பூதேவிநீளாதேவிசமேத தாமரையாள் கேள்வன், லக்ஷ்மி ரங்கர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
பிரத்யட்சம்: அர்ஜுனன், வருணன், ஏகாதச ருத்ரர்
உற்சவர்: பார்த்தசாரதி,
தாயார்: செங்கமலவல்லி, தாமரை நாயகி
தீர்த்தம்: கட்க தீர்த்தம், சங்கரசரஸ்
விமானம்: நாராயண விமானம்
காவிரிக்கரையில் அமைந்துள்ள திவ்யதேசம் இது.
தென்னாட்டில் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்த அர்ஜுனன் தாகம் எடுத்து இங்கு தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியரிடம் நீர் கேட்க, அவருடைய கமண்டலத்தில் நீர் இல்லாததால், அவர் கண்ணனை வேண்டுமாறு அர்ஜுனனிடம் கூறினார். அர்ஜுனன் கண்ணனைப் பிரார்த்திக்க, கண்ணன் அர்ஜுனனுக்கு ஒரு கத்தியைக் கொடுத்தார். அந்தக் கத்தியால் பூமியைப் பிளந்ததும், நீர் பெருக்கெடுத்து வந்தது. அதனால் இந்த புஷ்கரணி கட்க தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. கட்கம் என்றால் கத்தி.
உற்சவர் கையில் கத்தியுடன் இருக்கிறார்.
கோலவில்லி ராமர் சங்கு, சக்கரம், வில்லுடன் நான்கு கரங்கள் உள்ளவராக திருவெள்ளியங்குடியில் உள்ள கோலவில்லி ராமரும் இதேபோன்றுதான் காட்சியளிக்கிறார். அது தவிர மூலவர் சயனக்கோலத்திலும் இருக்கிறார்!)
உற்சவராகக் காட்சி அளிக்கிறார். கோலவல்லி ராமர் மூலவர், சற்றுத் தொலைவில் அமைந்துள்ள ஒரு தோப்பில் தனிக்கோவில் கொண்டிருக்கிறார். இங்கு ராமர் மகாவிஷ்ணு போல் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிப்பது குறிப்பிடத் தாக்கது. (
அர்ஜுனனுக்கு அவன் யார் என்ற ஞானத்தை இங்கு கண்ணன் புகட்டினார்.
பிரகாரத்தில் அர்ஜுனனுக்கு சந்நிதி இருக்கிறது. இதே சந்நிதியில் அர்ஜுனனுக்கு அருகில் கிருஷ்ணன், பார்த்தசாரதி விக்கிரகங்கள் இருக்கின்றன. கோவிலுக்கு முன்புறம் அகஸ்தியர் சந்நிதி இருக்கிறது.
செங்கமலவல்லித் தாயார், ஆண்டாள் சந்நிதிகள் இருக்கின்றன.
இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் கேட்கலாம்.
இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பொய்கை ஆழ்வாரின் கீழ்க்கண்ட திருவந்தாதிப் பாசுரமும் இந்த திவயதேசத்தைப் பற்றியதுதான் என்ற ஒரு கருத்து உண்டு.
தாமரையாள் கேள்வன் என்பது இந்த திவ்யதேச எம்பிரானைக் குறிப்பதாகத்தான் தோன்றுகிறது. ஆயினும், என்ன காரணத்தினாலேயே, இந்தப் பாசுரம் இந்த திவ்ய தேச மங்களாசாசனமாகக் கொள்ளப்படவில்லை.
திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
எட்டாம் திருமொழி திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி
1. கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்
குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,
தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,
பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1318)
2. கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிற டர்த்த காளையென்றும்,
வஞ்ச மேவி வந்தபேயின் உயிரை யுண்ட மாயனென்றும்,
செஞ்சொ லாளர் நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1319)
6. ஞால முற்று முண்டுமிழிந்த நாத னென்றும், நானி லஞ்சூழ்
வேலையன்ன கோலமேனி வண்ண னென்றும், மேலெழுந்து
சேலு களும்வயல் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பாலின் நல்ல மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1323)
7. நாடி யென்றனுள் ளொங்கொண்ட நாத னென்றும், நான்மறைகள்
தேடி யென்றும் காணமாட்டாச் செல்வ னென்றும்,சிறை கொள்வண்டு
சேடு லவுபொழில் கொள்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பாட கம்சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1324)
8. உலக மேத்து மொருவனென்றும் ஒண்சு டரோடும் பரெய்தா,
நிலவு மாழிப் படையனென்றும் நேச னென்றும், தென்திசைக்குத்
திலத மன்ன மறையோர்நாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பலரு மேச வென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே! (1325)
9. கண்ண னென்றும் வானவர்கள் காத லித்துமலர் கள்தூவும்,
எண்ண னென்று மின்பனென்றும் ஏழு லுகுக் காதியென்றும்,
திண்ண மாட நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,
பண்ணி னன்ன மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே. (1326)
10. பாருள் நல்லமறை யோர்நாங்கைப் பார்த்தன் பள்ளிசெங் கண்மாலை,
வார்கொள் நல்ல முலைமடவாள் பாடலைந் தாய் மொழிந்தமாற்றம்,
கூர்கொள் நல்ல வேல்கலியன் கூறு தமிழ் பத்தும்வல்லார்,
ஏர்கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளு மெய்துவாரே! (1327)
சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.
சில கோவில்கள் சில சமயம் பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில் எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
திரு எஸ். சுரேஷ் 9994621065 9750728645.
இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .
மூலவர்: சத்யபாமா ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணன், ராஜகோபாலன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். கையில் கயிறுடன் மாடு மேய்க்கும் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார் கண்ணன்.
பிரத்யக்ஷம்: விஷ்வக்சேனர், ஏகாதச ருத்ரர்
தாயார்: செங்கமல நாச்சியார், மடவரல் மங்கை
இங்கே தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை.
தீர்த்தம்: தடமலர்ப் பொய்கை
விமானம்: ஸ்வயம்பு விமானம், வேதமோத விமானம்
காவளம் என்றால் மலர்த்தோட்டம். சத்யபாமா இந்திரன் தோட்டத்தில் இருக்கும் பாரிஜாதத்தை விரும்பியதாகவும், இந்திரன் பாரிஜாத மலரைக் கொடுக்க மறுத்து விட்டதால், சத்யபாமாவுக்காக இங்கே ஒரு பாரிஜாத மலர்த்தோட்டத்தை கிருஷ்ணர் அமைத்ததாகவும் வரலாறு.
இந்த திவ்யதேசப் பெருமாள் துவாரகையிலிருந்து இங்கு வந்து எழுந்தருளி இருக்கிறார் என்பது ஐதீகம்.
இந்த ஊரில் பாம்புக்கடியால் யாரும் இறப்பதில்லை என்றும், யாரையாவது பாம்பு கடித்தால், விஷத்தை கிருஷ்ணர் இறக்கி விடுவார் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.
திருமங்கை ஆழ்வார் அவதரித்த இடமான திருக்குறையலூர் மற்றும் அவர் தன காதலி குமுதவல்லியின் விருப்பப்படி ஓராண்டுக்கு தினமும் 1000 பேருக்கு அன்னதானம் செய்த மங்கைமடம் ஆகிய ஓர் இந்த திவ்யதேசத்துக்கு மிக அருகில் உள்ளன.
இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
ஆறாம் திருமொழி திருநாங்கூர்க் காவளம்பாடி
1. தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,
நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய்,
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே. (1298)
சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.
சில கோவில்கள் சில சமயம் பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில் எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
திரு எஸ். சுரேஷ் 9994621065 9750728645.
இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .
மண்ணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள திவ்யதேசம் இது.
விஷ்ணு பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மியை மணமுடித்த பின் வசிஷ்டருக்கு இங்கு காட்சி கொடுத்தார். தேவர்களும் பெருமாளை லக்ஷ்மியுடன் தரிசிக்கக் கூட்டமாக இங்கு வந்தனர். தேவர்கள் மொத்தமாக இங்கு வந்ததால் இந்த திவ்யதேசம் தேவனார் தொகை என்று அழைக்கப் படுகிறது.
விஷ்ணுவுக்கும், லக்ஷ்மிக்கும் நடந்த திருமணத்தைக் குறிக்கும் வகையில் இங்குள்ள திருக்குளம் சோபன புஷ்கரணி என்றும், விமானம் சோபன விமானம் என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. (சோபனம் என்றால் திருமணம் என்று பொருள்.) தேவர்கள் இங்கு கூடியதைக் குறிக்கும் வகையில் புஷ்கரணிக்கு தேவசபா புஷ்கரணி என்ற பெயரும் விளங்குகிறது.
தேவர்களின் கடவுள் என்பதால் பெருமாள் தெய்வநாயகன் என்று அழைக்கப்படுகிறார். பாற்கடலிலிருந்து தோன்றியவர் என்பதால் தாயார் கடல் மகள் நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார்.
தாயாருக்குத் தனி சந்நிதி உள்ளது.
மூலவர்: தெய்வநாயகன்
நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் \
பிரத்யக்ஷம்: வசிஷ்டர், ஏகாதச ருத்ரர்
உற்சவர்: மாதவப் பெருமாள் தாயார்: கடல்மகள் நாச்சியார், உற்சவர்: மாதவநாயகி
தீர்த்தம்: சோபன புஷ்கரணி. தேவசபா புஷ்கரணி,
விமானம்: சோபன விமானம்
தாயார் கடல்மகள் நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
இந்தக் கோவில் விமானத்தின் நிழல் விமானத்துக்குள்ளேயே விழுவது இந்தக் கோவிலின் சிறப்பு.
இந்த திவ்ய தேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் காணலாம்.
இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.
சில கோவில்கள் சில சமயம் பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில் எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
திரு எஸ். சுரேஷ் 9994621065 9750728645.
இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார்.
ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள ராம பிரான் இந்த ஊரில் வந்து த்ருடநேத்ரர் என்ற முனிவர் வீட்டில் தங்கினார். அவர் யோசனைப்படி, பொன்னால் ஒரு பசுவைச் செய்து, அதற்குள் நான்கு நாட்கள் இருந்த பின், ஐந்தாவது நாள் அதற்குள்ளிருந்து வெளியே வந்து பல தானங்களைச் செய்தார். பொன்னால் செய்யப்பட பசுவையும் த்ருடநேத்திரருக்கு தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு த்ருடநேத்திரர் கட்டிய கோவில் இது. அதனால் இதற்கு செம்பொன் செய் கோவில் என்ற பெயர் வந்தது.
இந்தக் கோவில் பெருமாள் உறையூர் திவ்யதேசத்திலிருந்து வந்தவர் என்பது ஐதீகம்.
மூலவர்: பேரருளாளன்
நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் \
பிரத்யக்ஷம்: ஏகாதச ருத்ரர்
சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.
சில கோவில்கள் சில சமயம் பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில் எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
திரு எஸ். சுரேஷ் 9994621065 9750728645.
இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .
தெற்றி என்றால் மேடு. திருத்தெற்றி அம்பலம் என்ற சொல் சற்றே மேடான இடத்தில் அமைந்திருக்கும் கோவிலைக் குறிக்கிறது.
மூலவர்: செங்கண்மால், பள்ளி கொண்ட ரங்கநாதர், லட்சுமி ரங்கர். ஆதிசேஷன் மீது தெற்குப் பக்கம் தலை வைத்த சயனத் திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். திருமுடியையும், ஒரு கையையும் மரக்கால் மீது வைத்தபடி சயனித்திருக்க, இன்னொரு கையை கீழே தொங்கும் நிலையில் இடுப்பில் வைத்து சயனித்திருக்கிறார். தலைமாட்டில் ஸ்ரீதேவி, கால்மாட்டில் பூதேவி.
பிரத்யக்ஷம்: செங்கமலவல்லி, சூரியன், ஏகாதச ருத்ரர், அனந்தாழ்வார்
உற்சவர்: லக்ஷ்மிநாராயணன். செங்கமலவல்லி, ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாக சேவை சாதிக்கிறார்கள்.
தாயார்: செண்பகவல்லி
தீர்த்தம்: சூரிய புஷ்கரணி, சேஷ தீர்த்தம்
தல விருட்சம்: பலா
விமானம்: தேவ விமானம், ஸ்ருதிமய விமானம்
வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனிடமிருந்து பூமியை மீட்ட பிறகு
திருமால் இங்கு வந்து பள்ளி கொண்டுள்ளார். ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டதாக கண்கள் சிவந்து செங்கண்மாலாகக் காட்சி அளிக்கிறார்.
ஒரு சாபத்தினால் தன் சக்தி குறைந்த சூரியன் இங்கிருந்த சூரிய புஷ்காரணியில் நீராடித் தன் சக்தியைத் திரும்பப்பெற்றான் என்ற வரலாறும் உண்டு. அதனால்தான் இந்தக் கோவில் புஷ்கரணி சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே பன்னிரு ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார், ஹனுமான் ஆகியோர் தெற்கு நோக்கி நின்றபடி தரிசனம் தருகின்றனர்.
பிரகாரத்தில், தாயார் செங்கமலவல்லிக்குத் சன்னிதி உள்ளது.
திருநாங்கூர் பெருமாள் 11 பேரும், 11 திவ்யதேசங்களிலிருந்து வந்தவர்கள் என்ற வகையில் இந்தப் பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து இங்கு வந்து எழுந்தருளி இருக்கிறார்.
108 திவ்யதேசங்களில் இது மட்டுமே அம்பலம் என்று அழைக்கப் படுகிறது.
இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்கவுரையை இந்த வீடியோவில் காணலாம்.
இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
நான்காம் திருமொழி திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்
1. மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி
கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்-
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து
இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1277)
2.பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட
பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்-
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்
இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம்
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1278)
3. படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு
பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்-
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ
மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1279)
4. வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி
வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட
கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்-
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்
எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1280)
5.கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை
கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப
மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்-
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி
ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1281)
6. தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்
அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன
இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்-
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்
மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1282)
7. பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்
பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு
மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1283)
8. சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு
திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக்
கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்-
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்
ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1284)
9. ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி
எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்-
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1285)
10. சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்
கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி
சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே (1286)
சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.
சில கோவில்கள் சில சமயம் பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில் எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
திரு எஸ். சுரேஷ் 9994621065 9750728645.
இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார்.
உபரிசரவஸ் என்ற மன்னனுக்கும், உத்தங்கர் என்ற முனிவருக்கும் ஆகியோருக்குப் பெருமாள் இங்கே வைகுண்டத்தில் இருப்பது போல் காட்சி அளித்தார் என்பது ஸ்தல புராணம்.
இக்ஷ்வாகுகுல அரசனான ஸ்வேதகேது புண்ணியம் செய்ததால் வைகுண்டம் சென்றும், அவனுக்கு பசி, தாகம் போன்ற உணர்வுகள் இருந்ததால், அவனுக்கு அகங்காரம் நீங்கவில்லை என்று கூறி அவனின் இங்கு வந்து தவம் செய்யச் சொல்லி நாரதர் வலியுறுத்த, அவனும் இந்த திவ்யதேசத்துக்கு வந்து வைகுண்டக் காட்சி பெற்றான் என்பது இன்னொரு வரலாறு.
மூலவர்: வைகுண்டநாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் அமர்ந்த திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவியுடன் வைகுண்டத்தில் இருப்பது போல் காட்சி அளிக்கிறார்.
பிரத்யக்ஷம்: உபரிஸ்ரவஸ், உத்தங்கர், ஏகாதச ருத்ரர் (ஐராவதேஸ்வரர்)
உற்சவர்: பரமபதநாதன்
உற்சவரும், மூலவரும் ஒரே தோற்றத்தில் இருப்பது இந்தக் கோவிலில் இன்னொரு விசேஷம்.
சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.
சில கோவில்கள் சில சமயம் பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில் எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
திரு எஸ். சுரேஷ் 9994621065 9750728645.
இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.
சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார். இந்த 11 பெருமாளும் 11 திவ்ய தேசங்களிலிருந்து வந்தவர்கள் என்பது ஐதீகம்.
அரிமேய விண்ணகரம் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக உருவான கோவில். இந்த திவ்யதேசத்து எம்பெருமான் ஆயர்பாடியிலிருந்து எழுந்தருளியவர்.
இந்த திவ்யதேசத்தில் பெருமாள் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு கூத்தாடி உத்தங்கருக்கு ஆதி மூல நாராயண தத்துவத்தை உணர்த்தினார்.
ஒரு பந்தயத்தில் தோற்றதால் கருடனின் தாய் வினதா தன் கணவர் காஸ்யபரின் மூத்த மனைவியான கத்ருவிடம் அடிமையானாள். அதனால் கருடனும், காத்ருவின் பிள்ளைகளான ஆயிரம் பாம்புகளுக்கும் சேவை செய்து வந்தது. தன் பிள்ளைகள் விரும்பியபடி, இந்திர லோகத்திலிருந்து அமிர்தத்தை கருடன் கொண்டு வந்தால், வினதாவை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாக கத்ரு கூற, அதன்படி கருடன் இந்திரலோகத்துக்குச் சென்று இந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து அதை தர்ப்பைப் புல்லின் மீது வைத்து விட்டுத் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு சென்று விட்டார். பாம்புகள் அமிர்தத்தைப் பருக வந்தபோது, அமிர்த கலசத்தைத் தன் காலுக்கு அடியில் வைத்துக்கொண்டு பகவான் கூத்தாடினார் என்பதால் அவர் குடமாடும் கூத்தன் என்று அழைக்கப்படுகிறார் என்று இந்த திவ்யதேசத்துக்கு இன்னொரு வரலாறு உண்டு. (இந்தச் சம்பவம் மகாபாரதத்தில் சற்றே மாறுபட்ட விதத்தில் கூறப்பட்டிருக்கிறது)
அரிமேய விண்ணகரம் என்றால் பாவங்களைப் போக்கும் கோவில் என்று பொருள். ஹரியாகிய திருமால் வாழும் கோவில் என்றும் பொருள்.
வைகுண்டத்தில் திவ்யசூரிகள், நித்யஸூரிகளுக்குப் பெருமாள் எப்படி சேவை சாதிப்பாரோ அதேபோல் பூலோகத்தில் சேவை சாதிக்கும் இடங்கள் விண்ணகரம் என்று அழைக்கப்படுகின்றன. ஐந்து திவ்ய தேசங்கள் திருமங்கை ஆழ்வாரால் விண்ணகரங்கள் என்று மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முதல் இரண்டு விண்ணகரங்களான அரிமேய விண்ணகரம், வைகுண்ட விண்ணகரம் ஆகியவை திருநாங்கூரில் உள்ளன. மூன்றாவது விண்ணகரம் பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்), நான்காவதுவிண்ணகரம் சீர்காழியில் உள்ள காழிச் சீராம விண்ணகரம். ஐந்தாவது விண்ணகரம் நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்). திருவிண்ணகர் என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் இந்தப் பட்டியலில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
மூலவர்: குடமாடும் கூத்தன். அமிர்தகடேஸ்வரர் வலது காலைக் கீழே அமிர்தக் குடத்தின் மீது வைத்து, இடது காலை மடக்கி வைத்தபடி அமர்ந்த திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளனர்.